மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகள் மாநகர பேருந்திகளில் இலவசமாக பயணிக்கலாம்

மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகள் மாநகர பேருந்திகளில் இலவசமாக பயணிக்கலாம்
வாக்களிக்க ஏதுவாக அரசு நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்
விருதுநகரில் வாக்களிக்க ஏதுவாக மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகள் மாநகர பேருந்திகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல்19 அன்று 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அரசு நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். அதன்படி, ஏப்ரல் 19 அன்று 60 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மண்டலங்களில் அரசு நகரப்பேருந்துகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம்செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆ.ஆறுமுகம் தெரிவித்துள்ளர்.

Tags

Read MoreRead Less
Next Story