சேந்தமங்கலம் : அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சேந்தமங்கலம் : அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., சேந்தமங்கலம் யூனியன் ராமநாதபுரம் புதுார், அக்கியம்பட்டி, காரவள்ளி உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அனைத்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் சரியான முறையில் உள்ளதா என சரிபார்த்தார். பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் தோர்தலின் போது அவரவருக்கு ஒதுக்கப்படும் பூத்தில் சிறப்பாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் பிரபு, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் ஆனந்த்குமார், ராஜா, வழக்கறிஞர் சசிக்குமார், கொல்லிமலை ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், அய்யாசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகேசன், வரதராஜன், பஞ்., ஜெகதீசன், பொருளாளர் பாலு, ஸ்ரீபாலன் மற்றும் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story