தொடர் குற்றச்செயல்கள் - ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர் குற்றச்செயல்கள் - ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி

சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

சேலம் கோரிமேடு ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் (29). கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர்களில் அஜீத்குமார், சக்திவேல் உள்பட சிலர் கடந்த 2018-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தியாகராஜன் என்பவரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்கில் அஜீத்குமார், சக்திவேல் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் பிரபல ரவுடியான அஜீத்குமார் ஏற்கனவே 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சக்திவேல் மீது கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவாகி உள்ளதும் தெரிந்தது. இதேபோல் மணிகண்டன் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சக்திவேல், அஜீத்குமார், மணிகண்டன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story