தொடர் விடுமுறை; சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

தொடர் விடுமுறை காரணமாக, சபரிமலையில் ஐய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையால் பக்தர்கள் வெள்ளத்தில் திணறி வருகிறது சபரிமலை.சுப தரிசனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் துவங்கிய கடந்த நவம்பர் 16ம் தேதி முதல், பிரசித்தி பெற்ற சபரிமலையில் தினசரி ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டிரு மகேஸ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி முரளி நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். நடை திறந்த அதிகாலை முதலே பக்தர்கள் வெள்ளத்தால் திணறி வருகிறது சபரிமலை. இந்த வாரம் சனி, ஞாயிரோடு சேர்ந்து திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால் கடந்த வாரங்களை விட பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது

Tags

Next Story