கன்னியாகுமரியில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

கன்னியாகுமரியில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
கன்னியாகுமரியில் தாமரை பூ பறிக்க சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர் தனது மாமாவுடன் அந்தப் பகுதியில் உள்ள குளங்களில் தாமரை பூ பறிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் விஜய் தாமரை பூ பறிப்பதற்காக கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த சார்லி (24) என்பவர் விஜய் இடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த சார்லி தனது கையில் மறைத்து வைத்திருந்த அறிவாளால் விஜயை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த விஜய் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story