விவசாயிகளுக்கு எள் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி!
![விவசாயிகளுக்கு எள் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி! விவசாயிகளுக்கு எள் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி!](https://king24x7.com/h-upload/2024/02/09/386883-image3a821023.webp)
நெடுங்குடி விவசாயிகளுக்கு எள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
நெடுங்குடி விவசாயிகளுக்கு எள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
திருமயம் அரிமளம் வட்டார வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி முகாம் நெடுங்குடி கிராமத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி பேசுகையில் இப்போது நெல் அறுவடை முடிந்துள்ளது வயலை தரிசாக போடாமல் குறைந்த நாட்களில் அதிக தண்ணீர் தேவை இல்லாத எள் சாகுபடி செய்யலாம் பராமரிப்பு செலவு குறைவு விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
Next Story