சேத்துப்பட்டில் வருவாய்துறை சங்க வட்ட கிளை பொதுக்குழு கூட்டம்

சேத்துப்பட்டில் வருவாய்துறை சங்க வட்ட கிளை பொதுக்குழு கூட்டம்

வருவாய்துறை சங்க வட்ட கிளை பொதுக்குழு கூட்டம்


சேத்துப்பட்டில் வருவாய்துறை சங்க வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க வட்டக்கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோ. ஸ்ரீதரன் தலைமைதாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அனைவரையும் சுப்பிரமணியன் வரவேற்றார். இக்கூட்டத்தில் சேத்துப்பட்டு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க வட்டக்கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

வட்ட தலைவர் இரா. சுப்ரமணியன்,வட்ட செயலாளர் பிரபாகரன், வட்ட பொருளாளர் முருகானந்தம், வட்ட துணைத்தலைவர்கள் விஜயராணி, தண்டபாணி புத்தர், வட்ட இணை செயலாளர்கள் மு. காஜா ,லோகநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபு, ஆறுமுகம்ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் மாநில வைர விழாவிற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் .பாஸ்கரன் ,மணி மற்றும் சேத்துப்பட்டு வட்டாச்சியர் வெங்கிடேசன்ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நாளை 20ந் தேதி சேத்துப்பட்டில் வட்ட வைர விழா மாநாடு நடத்திடஇக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story