தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1838 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1838 வழக்குகளுக்கு தீர்வு
நீதிமன்றம் 
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1838 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6.90 கோடி மதிப்பிலான உத்தரவுகள் வழங்கப்பட்டன.சட்டப் பணிகள் ஆணை குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற த்திலும், அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் நீதிமன்றங்களில் உள்ள வட்ட சட்டப் பணிகள் சார்பில் அந்தந்த நீதிமன்றங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.இதில் நிலுவையில் உள்ள 6 ஆயிரத்து 14 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அதில் 1838 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரத்து 367க்கு உத்தரவு வழங்கப்பட்டது.

Tags

Next Story