ஏற்காட்டில் ஏழாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் ஏழாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பைல் படம்

சேலம் மாவட்டம் ஏற்காடு எம்ஜிஆர் நகர் பகுதிஅம்மை நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஏழாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாத். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் தனலட்சுமி (13). இவர் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமிக்கு கடந்த வாரம் அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு, வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனலட்சுமி வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 7ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story