மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை

மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை

போலீசார் விசாரணை 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலை குமரன் தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவிலில் அப்பகுதியில் உள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பல லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் குற்றவாளிகள் யார் என காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story