சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கழிவுநீர் அகற்ற கோரிக்கை 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையம் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் இருந்து பிள்ளையார் கோவில் தெரு செல்லக்கூடிய பிரதான சாலையில் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story