அங்கன்வாடியை சுற்றி கழிவுநீர் தேக்கம்

அங்கன்வாடியை சுற்றி கழிவுநீர் தேக்கம்

அங்கன்வாடியை சுற்றி கழிவுநீர் தேக்கம்

சிக்கராயபுரம் ஊராட்சியில், அங்கன்வாடி மையத்தை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மையத்தை சுற்றி கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி, சிவன்தாங்கல் பகுதியில் பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் சிக்கராயபுரம் ஊராட்சி இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் ஆபத்து உள்ளது. மேலும், கழிவுநீரால் பூச்சிக்கள், நந்தை, பாம்பு உள்ளிட்டவை அங்கன்வாடிக்குள் நுழைவதால் குழந்தைகள் அதிர்ச்சிகுள்ளாகி உள்ளனர். இந்த மையத்தை சுற்றி கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story