கழிவு நீர் இணைப்பு குழாய் சரி செய்யும் பணி தீவிரம்

கழிவு நீர் இணைப்பு குழாய் சரி செய்யும் பணி தீவிரம்

 பள்ளிபாளையம் நகராட்சியில் கழிவு நீர் இணைப்பு குழாய் சரி செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. 

பள்ளிபாளையம் நகராட்சியில் கழிவு நீர் இணைப்பு குழாய் சரி செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ,நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், போதிய நீர் வசதி இல்லாததால் கழிவறை பூட்டப்பட்டு, பொதுமக்கள், கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருவதாகவும் , தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர்கள், பள்ளிபாளையம் நகராட்சி கழிப்பிடம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நீர் இணைப்பு குழாயை சரி செய்யும் பணியில் தற்போது ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்பொழுது, தற்போது போர்க்கால அடிப்படையில் பொங்கல் பண்டிகை ஒட்டி, கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகளின் போது கழிப்பிடத்திற்கு செல்லும் நீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளதால் ,அதை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது மேலும் பணிகள் நிறைவு பெற நாட்கள் பிடிக்கும் நிலை ஏற்பட்டால், தற்காலிகமாக தண்ணீர் வாகனங்களில் கழிப்பிடத்திற்கு தேவையான நீர் முறையாக வழங்குவதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தனர்....

Tags

Next Story