சேதமடைந்த சாலையை சீரமைக்க செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

சேதமடைந்த சாலையை சீரமைக்க செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

சேதமடைந்த சாலை

செவிலிமெடுசாலை பகுதியில் சேதமடைந்த பகுதியில் மழை நீர் குட்டைபோல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு மாரியம்மன் கோவில் வழியாக பிருந்தாவன் நகருக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இப்பகுதியில் பெய்யும்மழை நீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால், காலி இடங்களில் தேங்கியுள்ள மழை நீர், பிருந்தாவன் நகர் பிரதான சாலையின் குறுக்கே செல்கிறது.

இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்த பகுதியில் மழை நீர் குட்டைபோல தேங்கியுள்ளதால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதோடு, மழைநீர் வெளியேற வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story