வாடகைதாரரிடம் 'சில்மிஷம்' - வீட்டு உரிமையாளர் கைது

வாடகைதாரரிடம் சில்மிஷம் - வீட்டு உரிமையாளர் கைது

பைல் படம் 

போரூரில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஆதம்பாக்கம், பாரத் நகரைச் சேர்ந்தவர் சங்கர், 44. இவருக்கு சொந்தமான வீடு போரூர், சேக்மான்யம் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் 35 வயது பெண், தன் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய போது, சங்கர் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, 'எங்கே இருக்கிறாய்' என விசாரித்துள்ளார். அப்பெண் தன் வீட்டிற்குச் சென்ற போது, சங்கர் அங்கிருந்தார். திடீரென அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பெண் சத்தம் போடவே, அங்கிருந்து நழுவினார். இதுகுறித்து, மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில், நேற்று அப்பெண் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் சங்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story