பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

14வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி தாய்நகர் சுனாமிநகரைச் சேர்ந்த ஜேராம் மகன் அஜித் (26) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 31.08.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று குற்றவாளியான அஜித்துக்கு 3 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் ரபீலா குமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags

Next Story