சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை !

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை !

கோர்ட்

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோ காட்டுவதாக தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து சிறுமியிடம் அவர் ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு செய்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு இறுதி விசாரணை முடிந்து நேற்று சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வடிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story