சிறுமிக்கு பாலியல் தொல்லை -வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை -வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

அமீன் 

திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரைப் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த வாலிபரின் நண்பரான கிருஷ்ணகிரி மாவட்டம், ராசிவீதி பகுதியை சேர்ந்த அமீன் (28) என்பவர் அந்த சிறுமியை அவரது காதலர் அழைத்துவர சொன்னனதாக சொல்லி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். பின்னர் கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகில் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிடவே அந்த நபர் தப்பி ஓடினார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அமீன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் பகுதியில் பல்வேறு கடைகளில் குழந்தை தொழிலாளிகள் பணி புரிகின்றனர். மாவட்ட ஆட்சியர் குழந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்பாக உள்ளது.

Tags

Next Story