சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

பைல் படம் 

திருவையாறில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மேலத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்த பிரிட்டோ என்கிற ஜான் (25) என்ற இளைஞரை, திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story