சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் விதிக்கப்பட்ட வாலிபர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி அடுத்த பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்கிற கவுதம் (வயது 24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி அப்பகுதியில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை ஆசைவார்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story