பாலியல் துன்புறுத்தல்; போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பாலியல் துன்புறுத்தல்; போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

 கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜம்படையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஜான்பால், 35, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்படையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஜான்பால், 35, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, ஜம்படை கிராமத்தை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் ஜான்பால், 35; இவர், சில தினங்களுக்கு முன் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ஜான்பாலை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ஜான்பால் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் ஜான்பால் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சசாங்சாய் (பொறுப்பு) கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில், கலெக்டர் ஷ்ரவன்குமார், குண்டர் சட்டத்தில் ஜான்பாலை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, கடலுார் மத்திய சிறையில் உள்ள ஜான்பாலிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

Tags

Next Story