சங்கராபுரம் : பிராமணர் சங்க ஆலோசனைக் கூட்டம்

சங்கராபுரம் : பிராமணர் சங்க ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துாரில் பிராமணர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, வட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அருணாசலம், துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், ஸ்ரீகண்டன், ஆலோசகர் ரமணி, லட்சுமி நாராயணன், பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் கணபதி முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெயகுமார் வரவேற்றார். சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 2024ம் ஆண்டிற்கு சங்கம் சார்பில் காலண்டர், டைரி போடுவது.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிராமணர்களுக்கு தமிழக அரசு சான்று வழங்க அரசை கேட்டுக்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காயத்ரி அறக்கட்டளை புதிய தலைவராக குமார் தேர்வு செய்யப்பட்டார். சங்க பொருளாளர் மகாதேவன் நன்றி கூறினார்.

Tags

Next Story