வெள்ளிமேடுப்பேட்டையில் விஜயகாந்த்திற்கு மொட்டையடித்து அஞ்சலி

வெள்ளிமேடுப்பேட்டையில் விஜயகாந்த்திற்கு மொட்டையடித்து அஞ்சலி
மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய தேமுதிகவினர்
வெள்ளிமேடுப்பேட்டையில் விஜயகாந்த்திற்கு மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்நின் நீனைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கலந்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தியதுடன் 1000 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்பு ஊர்வலமாக சென்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார், மேலும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து விஜயகாந்த்திற்க்கு அஞ்சலி செலுத்தினார்கள், இதில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story