தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை, பாராட்டு

குடியாத்தத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார் நகராட்சித் தலைவர்.

நகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து விருந்து உபசரித்த நகர் மன்ற தலைவர். சென்னை மிக்ஜாம் புயலில் போது சேதமடைந்த பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்ட குடியாத்தம் நகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து விருந்து உபசரித்த நகர் மன்ற தலைவர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜான் புயல் ஏற்பட்டு சென்னை முழுவதும் அதிகளவில் சேதம் ஏற்பட்டது எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி பொது மக்கள் உணவின்றி தவித்தனர் . இந் நிலையில் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி சார்பில் சுமார் 40 பணியாளர்களை அனுப்பியது நகராட்சி நிர்வாகம் இதற்கிடையே தூய்மை பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் நகர மன்ற தலைவர் சௌந்தராஜன் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தோடு பிரியாணி விருந்து அளித்து உபசரித்தனர். இதனால் நகராட்சி பணியாளர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த நகர் மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் நகராட்சி ஆணையளர் மங்கையர்கரசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள்,நகர் மன்ற உறுப்பினர்கள்,பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story