தந்தை இறந்த நிலையிலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி !

ராமநாதபுரத்தில் தந்தை இறந்த நிலையிலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி தேர்வு எழுதிவிட்டு கலங்கிய கண்களுடன் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வீட்டிற்கு சென்றார்.
ராமநாதபுரம் காட்டூர்ணி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரின் தந்தை முனியசாமி என்ற கண்ணன் நேற்று இரவு இறந்துவிட்டார். தந்தை இறந்த நிலையிலும் மாணவி ஆர்த்தி இன்று பிளஸ் 2 பொருளியல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார். தேர்வு எழுதிவிட்டு கலங்கிய கண்களுடன் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வீட்டிற்கு சென்றார்.

Tags

Next Story