சீர்காழியில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சீர்காழியில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கொடியேற்றம்

சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி என்கின்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வருடா வருடம் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டிற்கான சிவராத்திரி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூரை நிகழ்வு வருகின்ற 8ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தது.

Tags

Next Story