சிவன் அலங்காரத்தில் சந்தோஷி அம்மன்

சிவன் அலங்காரத்தில் சந்தோஷி அம்மன்

குமாரபாளையத்தில் சிவன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடுகள் நடந்தன.


குமாரபாளையத்தில் சிவன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடுகள் நடந்தன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிவன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடுகள் நடந்தன. சிவராத்திரி நாளையொட்டி குமாரபாளையம் நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அம்மன், சிவன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ராத்திரி முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Tags

Next Story