மழைநீர் தேங்கி நிற்பதால் கடை வியாபாரிகள் அவதி

மழைநீர் தேங்கி நிற்பதால் கடை வியாபாரிகள் அவதி

மழைநீர் தேங்கி நிற்பதால் கடை வியாபாரிகள் அவதி

குறிஞ்சிப்பாடி ரயில்நிலையம் அருகே மழைநீர் தேங்கி நிற்பதால் கடை வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயிலடியில் நேற்று இரவு பெய்த கனமழை யின் காரணமாக ஒரு சில கடைகள் வெளியே அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story