செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

கடைகள் அடைப்பு

மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம்,மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சூனாம்பேடு,சோத்துப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று முழு கடையடைப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா தலைமையில்,மதுரையில் நடைபெறும் வணிகர் தின 41 - வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கு அனைத்து வணிகர்களும் பங்கு கொள்வதால் இன்று இந்த கடையடைப்பு நடைபெறுகிறது.

Tags

Next Story