சின்னசேலத்தில் வாடகை பாக்கி - ஒன்பது கடைகளுக்கு சீல்

சின்னசேலத்தில் வாடகை பாக்கி - ஒன்பது கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் வாடகை பாக்கியால் ஒன்பது கடைகளுக்கு சீல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சின்னசேலம் பேரூராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 79 கடைகள் உள்ளன. இதில் தொடர்ந்து வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரங்கம் உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சிக்கு சொந்தமான பாரதி அங்காடி, பஸ் நிலையம், அண்ணா அங்காடி ஆகிய இடங்களில் உள்ள 9 கடைகளுக்கு பேரூராட்சி இளநிலை உதவியாளர் கிருஷ்ணவேணி, துப்புரவு ஆய்வாளர் ராஜா மற்றும் பணியாளர்கள் சீல் வைத்தனர்.

Tags

Next Story