குட்கா விற்ற 6 கடைகளுக்கு சீல்

குட்கா விற்ற 6 கடைகளுக்கு சீல்

குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் 

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கடைகளில் குட்கா விற்ற 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

ராணிபேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், அரக்கோணம் டவுன் மற்றும் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான கீழாந்துரை, அன்வர்திகான்பேட்டை, குருவராஜபேட்டை, வளர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story