காஞ்சியில் தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம்: விபத்தில் சிக்கும் அபாயம்

காஞ்சியில் தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம்: விபத்தில் சிக்கும் அபாயம்

தடுப்பு சுவர் இல்லாத பாலம்

காஞ்சிபுரத்தில் சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில்இருந்து, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனிக்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின்குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இந்த பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர்,

ஆறு ஆண்டுகளுக்கு முன் பலத்த மழையின்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புச்சுவர் இடிந்துவிட்டது. சிறுபாலத்திற்கு மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்கவில்லை.

மின்விளக்கு வசதி இல்லாத இப்பகுதியில், இரவு நேரத்தில் சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனியில், வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், பாலம் அருகில் மின்விளக்கு அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story