குரூப்-II தேர்விற்கான குறுகிய கால பயிற்சி

குரூப்-II தேர்விற்கான குறுகிய கால  பயிற்சி

ஆட்சியர் ஜெயசீலன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-II தேர்விற்கான குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்புகள் 01.07.2024 முதல் 05.07.2024 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். -

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2327 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II தேர்வு வரும் 14.07.2024 அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைந்த குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்புகள் 01.07.2024 முதல் 05.07.2024 வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடத்தப்படவுள்ளது.

இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இக்குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். இந்த இக்குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/GgHFygFJ8VXLAwb5A என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதில் தகுதியுள்ள நபர்கள் தேர்வுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்க்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய்த்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story