சாய்பாபா கோவிலில் சித்த மருத்துவ முகாம்

சாய்பாபா கோவிலில் சித்த மருத்துவ முகாம்

சித்த மருத்துவ முகாம்

திண்டுக்கல், நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் சித்தமருத்துவ முகாம் நடைப்பெற்றது.

திண்டுக்கல், நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம்,3 வேளை அன்னதானம் நடைபெற்று வருகிறது.மேலும் வியாழக்கிழமை தோறும் சாய்பாபாவுக்கு பால்,பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த நிலையில் மாதந்தோறும் வியாழக்கிழமை அன்று சித்த மருத்துவர் கயிலை முத்துக்கிருஷ்ணன் தலைமையில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற சித்த மருத்துவ முகாமில் கண்ணில் நீர் வடிதல்,மாலைக்கண் நோய்,ஒரு பக்க தலைவலி,நாள்பட்ட தலைவலி,கண்களில் ஏற்படக்கூடிய புரை,சதை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மூலிகை மருந்து வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சாய்பாபா கோவில் நிர்வாகி சாய்முருகன் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story