முற்றுகைப் போராட்டம்

முற்றுகைப் போராட்டம்

காளையார்கோவிலில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த நர்சிங் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

காளையார்கோவிலில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த நர்சிங் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகைப் போராட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 27ஆம் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த பட்டியலின நர்சிங் மாணவி மருதலெட்சுமி மரணத்திற்கு நீதி கேட்டு, உண்மை குற்றவாளிகளை கைது செய்து எஸ்சி,எஸ்டி வழக்கு பதிவு செய்ய கோரியும், குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும், பறையர் இன மக்கள் வாழ தகுதியற்றதாக சிவகங்கை மாவட்டத்தை அறிவிக்க கோரியும் சுதந்திர தொழிலாளர் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story