வண்டலுாரில் இயங்காத சிக்னல்கள்

வண்டலுாரில் இயங்காத சிக்னல்கள்
வண்டலுாரில் இயங்காத சிக்னல்கள்
வண்டலுாரில் சிக்னல்கள் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் மேம்பாலம் அருகில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த இடத்தில் தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் நின்று இடதுபுறமாக கேளம்பாக்கம் நோக்கியும், வலது புறமாக மண்ணிவாக்கம் நோக்கியும் செல்லும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் இருந்து வரும் வாகனங்கள். வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள சிக்னலில் நின்று வலது புறமாகவும், கேளம்பாக்கம் நோக்கியும், நேராக தாம்பரம் நோக்கியும் செல்லும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிக்னல்கள் சில நாட்களாக சரி வர இயங்கவில்லை. போக்குவரத்து போலீசார் அந்த இடத்தில் அதிக அளவில் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர்.

இந்த இடத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பழுதான சிக்னலை சீரமைத்து, வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story