கெங்கவல்லி திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

கெங்கவல்லி திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கெங்கவல்லி திமுக சார்பில்நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், பொது மக்களிடம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து பெற்றனர்.கெங்கவல்லி பேரூராட்சியில், கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், நீட் தேர் வுக்கு எதிரான தபால் அட்டையில் கையெழுத்து வாங்கும் பணி நேற்று நடந்தது கெங்கவல்லி நகர செயலாளர் பாலமுருகன்தொடங்கி வைத்தார்.

கிழக்கு மாவட்ட விளையாட்டுமேம்பாட்டு அணிதுணை அமைப்பாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கெங் கவல்லி பேரூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று, நீட் தேர்வுக்கு எதிரான அட்டைகளைவழங்கி, அதில் பொது மக்கள் மாணவர்களிடம் கையெழுத்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக தபால் அட்டையில் கையெழுத திட்டனர்.

Tags

Next Story