குமாரபாளையத்தில் நீட் விலக்கிற்கான  கையெழுத்து இயக்கம்

குமாரபாளையத்தில் நீட் விலக்கிற்கான  கையெழுத்து இயக்கம்
நீட் விலக்கு 
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் நீட்விலக்கிற்கான கையெழுத்து இயக்கம் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில அமைப்பு செயலர் செல்வமுருகேசன் பங்கேற்று நீட் விலக்கின் அவசியம் குறித்து பேசினார். இதில் சி.பி.எம், மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்பாளர்கள், இலக்கிய தளம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story