நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்


நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை திருப்பூரில் அயலக அணி செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அப்துல்லா துவக்கி வைத்தார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் துவங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தினை மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் அயலக அணி செயலாளருமான எம் எம் அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வை மக்கள் இயக்கமாகக் கொண்டு சேர்த்து 50 நாட்களில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 2 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story