குப்பைகழிவுகளால் நிறைந்த சிக்கராயபுரம் மயானம்

குப்பைகழிவுகளால் நிறைந்த சிக்கராயபுரம் மயானம்

சிக்கராயபுரம் மயானம் முழுவதும் ஆங்காங்கே குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், சடலங்களை நல்லடக்கம் செய்ய வருவோர் அவதிப்படுகின்றனர்.  

சிக்கராயபுரம் மயானம் முழுவதும் ஆங்காங்கே குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், சடலங்களை நல்லடக்கம் செய்ய வருவோர் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் சிக்கராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு தினசரி சேகரமாகும் குப்பையை கொட்ட போதிய இடமில்லை. இதனால், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கராயபுரத்தில், சுடுகாட்டில் குப்பையை கொட்டுகின்றனர். இதனால், சுடுகாடு முழுதும் குப்பை குவியலாக மாறி உள்ளது. அந்த பகுதியில் இறப்பு ஏற்பட்டால் குப்பை குவியல்களுக்கிடையே சடலங்களை எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்ய நேரிடுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'கடைசி நேர ஈமசடங்கு களை கூட சிக்கராயபுரத்தில் நிம்மதியாக செய்ய முடியாத வகையில் சுடுகாட்டுக்கு, குப்பையால் சமாதி கட்டியுள்ளனர். குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும்' என்றனர்.

Tags

Next Story