சிலம்பாட்டப் போட்டி: பேராவூரணி மாணவர்கள் சாதனை

சிலம்பாட்டப் போட்டி: பேராவூரணி  மாணவர்கள் சாதனை

சிலம்பாட்ட போட்டியில் சாதித்த மாணவர்கள்


கரூர் மாவட்டம், குளித்தலை அருகில், லாலாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த மாணவர்களுக்கு ஒற்றைச் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், வார் சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதில் சேக் சாஜித், பூவிகா, சுந்தர் கணேஷ், அப்துல் ராபித், அப்துல் ராசித், கைலாஷ், அகிலன், சுனில் ராஜ், கவின் ராஜ் ஆகிய 9 மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர்.

விஷாலினி, முகமது ஆசிக், முகில் ஆகிய மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். ரோகித் ஸ்ரீராம், விஷால், அப்துல் முபின் , நிகில் ஆருக்சன், அஜ்மல் தீன் ஆகிய 5 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த பயிற்சியாளர் மருத.உதயகுமார் மற்றும் ம.ஸ்பர்ஜன்ராஜ் ஆகியோரை பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags

Next Story