விருதுநகரில் விஜயகாந்த்க்கு அனைத்து கட்சி சார்பில் மௌன ஊர்வலம்

விருதுநகரில் விஜயகாந்த்க்கு அனைத்து கட்சி சார்பில் மௌன ஊர்வலம்
விஜயகாந்த் அவர்களுக்கு விருதுநகரில் அனைத்து கட்சி சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது
விஜயகாந்த்க்கு விருதுநகரில் அனைத்து கட்சி சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது

தேமுதிகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இயற்கை எய்தினார்.

இந்நிலையில் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கலும் அஞ்சலியும் செலுத்தி வரும் நிலையில், விருதுநகரில் இன்று அனைத்துக் கட்சியின் சார்பாக மௌன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மணிக்கூண்டு அருகே தொடங்கிய இந்த மௌன ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. மௌன ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருப்பு பேஜ் அணிந்து கொண்டு மவுனமாக ஊர்வலமாக வந்தனர்.

மவுன ஊர்வலம் நிறைவடைந்தவுடன். புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு கட்சி வேறுபாடு இன்றி திமுக, அதிமுக, BJP, நாம் தமிழர், விசிக, மக்கள் நீதி மையம், புதிய தமிழகம் கட்சியினர் உட்பட அனைத்துக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவியும் மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story