பெரம்பலூரில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம்

பெரம்பலூரில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம்

அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்

பெரம்பலூரில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அனைத்து கட்சியினரும் மௌன ஊர்வலமாக வந்து, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்

பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அனைத்து கட்சியினரும் மௌன ஊர்வலமாக வந்து, மலர் அஞ்சலி செலுத்தினார்கள் தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான, நடிகர் விஜயகாந்த் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட தேமுதிக கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சிவா.ஐயப்பன் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஐனவரி 12ம் தேதி இன்று காலை 11:30 மணி அளவில் ஊர்வலமாக வந்தனர்.

காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் வளைவு, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வந்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து வீரவணக்க முழக்கமிட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல், மாநிலச் செயலாளர் வீர செங்கோலன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அதிமுக நகர செயலாளர் பூபதி, உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேமுதிக ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story