திருவாரூரில் பல்வேறு கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம்

திருவாரூரில் பல்வேறு கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம்

மௌன ஊர்வலம்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பாக நடைபெற்ற மௌன ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
மறைந்த தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திமுக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது . இந்த பேரணியானது கடைவீதி வழியாக நேதாஜி சாலை ,கீழ வீதி வரை சென்று நிறைவடைந்தது .இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நகர செயலாளர் சதீஷ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story