நாகையில் மறைந்த தேமுதிக தலைவருக்கு மௌன அஞ்சலி ஊர்வலம்

நாகையில் மறைந்த தேமுதிக தலைவருக்கு மௌன அஞ்சலி ஊர்வலம்

நாகையில் மறைந்த தேமுதிகவிற்கு மௌன அஞ்சலி ஊர்வலம்

மறைந்த கேப்டன் விஜயகாந்திற்க்கு, நாகையில் அனைத்து கட்சியினர் சார்ப்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்மும் தேமுதிகவினர் சார்ப்பில் மொட்டை அடித்து,அன்னதானம் வழங்கி, தேமுதிக வினர் புகழஞ்சலி செலுத்தினர்.

மறைந்த கேப்டன் விஜயகாந்திற்க்கு நாகையில் அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர், விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, மொட்டை அடித்தும், அன்னதானம் வழங்கியும், புகழஞ்சலி செலுத்தினர். தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான, கேப்டன் விஜயகாந்த், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் 28,ம் தேதி உயிரிழந்தார்.

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக கட்சியினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைப்போல் நாகப்பட்டினத்தில் இன்று அனைத்து கட்சி சார்பில் கேப்டன் விஜயகாந்திற்க்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலத்தில், பாஜக, அதிமுக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இதில் திரளான கலந்து கொண்டனர்.

நாகை கோட்டைவாசல் படியில் இருந்து துவங்கிய மௌன அஞ்சலி ஊர்வலமானது, அவுரித்திடலில் முடிவடைந்தது. அங்கு கேப்டன் விஜயகாந்தின் பேனர் முன்பு மொட்டை அடித்துக் கொண்ட தேமுதிக தொண்டர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தேமுதிகவினர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கி, கேப்டன் விஜயகாந்திற்க்கு புகழஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story