தேமுதிக தலைவருக்கு மெளன அஞ்சலி - அனைத்து கட்சியினர் பங்கேற்பு

தேமுதிக தலைவருக்கு மெளன அஞ்சலி - அனைத்து கட்சியினர் பங்கேற்பு

அஞ்சலி ஊர்வலம் 

சிவகங்கையில் விஜயகாந்த் மறைவையொட்டி தேமுதிக சார்பில் நடந்த அஞ்சலி ஊர்வலத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்,

தேமுதிக கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் சிவகங்கையில் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை நகரச் செயலாளர் தர்மராஜ் தலைமையில், மகளிர் அணி மாநில பொறுப்பாளர் அங்கயற்கண்ணி, சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் ஞானமுத்து ஆகியோர் முன்னிலையில் அனைத்து கட்சியினர் மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து அனைத்து கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி வீதி, மரக்கடை வீதி, அரண்மனை வாசல் வழியாக சண்முகராஜா கலையரங்கம் அருகில் அமைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், அதிமுக சார்பில் நகரசெயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சண்முகராஜன், கவுன்சிலர்கள் மகேஷ், விஜயகுமார், அமுமுக கவுன்சிலர் அன்புமணி, பாஜக உதயா, கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைத்து கட்சிகளும் மெளன ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்

Tags

Next Story