பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3.57 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அரசுப்பட்டு கூடு அங்காடியில் 824 கிலோ பட்டு கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் 3 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 824 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக 515 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 207- ரூபாய்க்கும், சராசரியாக 433.10- ரூபாய்கக்கும் விற்பனையானது.மொத்தம் நேற்று ஒரே நாளில் 3,57,000 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது

Tags

Next Story