அபூர்வா அகாடமியில் வெள்ளி விழா

அபூர்வா அகாடமியில் வெள்ளி விழா

 வெள்ளி விழா

திருக்கோவிலூரில் அபூர்வ அகாடமியின் வெள்ளி விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழன் தொன்மை சிலம்பப் பள்ளியின் தலைமை ஆசான் சிங்கார உதியன் தலைமை தாங்கினார். அபூர்வா அகாடமி நிறுவனர் ராஜாமுருகன் வரவேற்றார். நல்நூலகர் மு. அன்பழகன், ராணுவ வீரர் , கு. கல்யாணகுமார், மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களான நகர்மன்றத் தலைவர் T.N.முருகன் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் T. குணா மாணவர்கள் நடித்த வீரம் என்ற குறும்படத்தினை வெளியிட்டு கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மாணவர்கள் கங்காதேவி, நித்திஷா, சிவசக்தி நன்றி கூறினார்கள்.

Tags

Next Story