சிங்காரச் சென்னை 2.0 : புதிய கட்டிடத்திற்கு அடிக்கல்

சிங்காரச் சென்னை 2.0  :  புதிய கட்டிடத்திற்கு அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா 

சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் புளியந்தோப்பு போகிப்பாளையம் பகுதியில் உள்ள சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மேயர் பிரியா, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், நியமன குழு உறுப்பினர் வேலு, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சுமதி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story