உலா வரும் ஒற்றை காட்டு யானை - அச்சத்தில் மக்கள்

உலா வரும் ஒற்றை காட்டு யானை - அச்சத்தில் மக்கள்

காட்டு  யானை 

தருமத்துப்பட்டி- பன்றிமலை சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்துக்குள்பட்ட வனப்பகுதியில் முகாமிட்ட யானைகள், இரவு நேரங்களில் உணவு தேடி விவசாயத் தோட்டங்களுக்கு வந்து செல்கின்றன. இதன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்திலேயே வன விலங்குகளால் அதிக பயிா் இழப்புகள் நிறைந்த பகுதியாக கன்னிவாடி வனச் சரகம் அமைந்துள்ளது.

இதன் காரணமாக, ஆடலூா், பன்றிமலை, தோணிமலை, அழகுமடை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாலை 5 மணிக்குப் பிறகு இரு சக்கர வாகனங்களில் மலைச் சாலையில் பயணிப்பதை தவிா்த்து விடுகின்றனா்.இந்த நிலையில், தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை செல்லும் மலைச் சாலையில், அழகுமடை அருகே சனிக்கிழமை காலை ஒற்றை யானை சாலையைக் கடந்து செல்வதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Tags

Next Story